மக்களே பாத்து இருங்க.. பாளையங்கோட்டையில்.. 8 மணி நேரத்தில் 260 மி.மீட்டர் கொட்டித் தீர்த்த மழை!

Dec 17, 2023,06:54 PM IST

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.


நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று  இரவு முதல் மழைவெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இன்று காலை முதல் கன மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.


இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் காலை எட்டரை மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. அதேபோல மூலக்கரைப்பட்டியிலும் 260 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியுள்ளது. நம்பியார் அணைப் பகுதியில் 252 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கொடுமுடியாறு அணைப் பகுதியிலும்  201 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.




அம்பாசமுத்திரம் 201, சேரன்மாதேவி 236, நாங்குநேரி 220, பாபநாசம் 219, ராதாபுரம்  209 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. நெல்லையில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை காலைக்குள் இந்த இடங்களில் எல்லாம் 300 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இதில் மாஞ்சோலைப் பகுதியில் பிற்பகல் 3 மணி வரை 286 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்