திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழைவெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இன்று காலை முதல் கன மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் காலை எட்டரை மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. அதேபோல மூலக்கரைப்பட்டியிலும் 260 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியுள்ளது. நம்பியார் அணைப் பகுதியில் 252 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் 201 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அம்பாசமுத்திரம் 201, சேரன்மாதேவி 236, நாங்குநேரி 220, பாபநாசம் 219, ராதாபுரம் 209 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. நெல்லையில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை காலைக்குள் இந்த இடங்களில் எல்லாம் 300 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதில் மாஞ்சோலைப் பகுதியில் பிற்பகல் 3 மணி வரை 286 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}