திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழைவெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இன்று காலை முதல் கன மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் காலை எட்டரை மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. அதேபோல மூலக்கரைப்பட்டியிலும் 260 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியுள்ளது. நம்பியார் அணைப் பகுதியில் 252 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் 201 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அம்பாசமுத்திரம் 201, சேரன்மாதேவி 236, நாங்குநேரி 220, பாபநாசம் 219, ராதாபுரம் 209 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. நெல்லையில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை காலைக்குள் இந்த இடங்களில் எல்லாம் 300 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதில் மாஞ்சோலைப் பகுதியில் பிற்பகல் 3 மணி வரை 286 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}