டெல்லி: இது உருப்படாத கூட்டணி. தோற்றுப் போன, சோர்வடைந்து போன, நம்பிக்கை இழந்து விட்ட, என்னை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
"இ.ந்.தி.யா." என்ற பெயரில் புதிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலவராக சோனியா காந்தியை அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி குறித்து தேசிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தக் கூட்டணி உருவானது முதலே பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் வருகின்றனர். இதுவே எங்களுக்கு வெற்றி என்று எதிர்க்கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு சாடியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை, இலக்கில்லாத ஒன்று, இந்தியன் முஜாஹிதீன் என்று வர்ணித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு போன்றதுதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்றும் பிரதமர் விளாசினார்.
இப்படி ஒரு இலக்கற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை நான் ஒரு போதும் பார்த்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார் . பிரதமர் மேலும் கூறுகையில், இந்தியா என்ற பெயரை வைத்துக் கொண்டதற்காக அவர்களே அவர்களைப் பாராட்டிக் கொள்கின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ், ஈஸ்ட் இந்தியா கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.. இதிலும் கூடத்தான் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. இந்தியா என்ற பெயரை வைத்து விட்டால் போதுமா.. ! இந்தியா என்ற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.
இந்த கூட்டணி தோல்வி அடைந்தவர்களால், சோர்ந்து போனவர்களால், நம்பிக்கை இழந்தவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி. மோடியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களது ஒரே குறிக்கோள். அவர்கள் கடைசி வரை எதிர்க்கட்சிகளாகவே இருக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. பாஜக 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் பிரதமர் மோடி.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்தியன் முஜாஹிதீன் என்று பிரதமர் வர்ணித்திருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}