அயோத்தியில் அதி நவீன சர்வதேச விமான நிலையம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Dec 30, 2023,05:17 PM IST

அயோத்தி: அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று  அயோத்தி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கட்டப்பட்டுள்ள அதி நவீன விமான நிலையத்தை தொடங்கி வைத்தார்.


அயோத்தி ராமர் கோவில் சர்வதசே அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் , உலக நாடுகளின் மக்களையும் அங்கு அதிக அளவில் கவரும் வகையிலான திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. 


அங்குள்ள ரயில் நிலையம் அதி நவீனமாக்கப்பட்டுள்ளது. ரூ. 240 கோடியில் ரயில் நிலையத்தை முற்றிலும் நவீனமாக மாற்றியமைத்துள்ளனர். மேலும் ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தியா தம் ஜங்ஷன் (அயோத்தி கோவில் சந்திப்பு) என்று மாற்றப்பட்டுள்ளது. லிப்ட்டுகள், எஸ்கலேட்டர்கள், வெயிட்டிங் ஹால், கிளாக் ரூம், உணவு பூங்கா உள்ளிட்டவையும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.




மிகவும் பாரம்பரியான முறையில் ரயில் நிலையத்தை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக ராமர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையிலான வடிவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் மணிமகுட வடிவம் அமைக்க்பட்டுள்ளது. மேலும் பெரிய வில் வடிவமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை முதலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


அதன் பின்னர் அவர் கார் மூலமாக அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். வழியெங்கும் ஏராளமான மக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி பிரதமர் விமான நிலையம் சென்றார்.


அயோத்தி சர்வதேச விமான நிலையம்




அதேபோல அயோத்தியில் ரூ. 1450 கோடி செலவில் அதி நவீன சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.  6500 சதுர அடி பரப்பளவில் விமான நிலையப் பகுதி அமைந்துள்ளது. வருடத்திற்கு 10 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்திற்குள் ராமாயாணம், ராமர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு முதல் கட்டமாக இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 6ம் தேதி முதல் இந்த விமான நிலையம் இயங்கத் தொடங்கும்.


6 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்




இதுதவிர ரூ. 15,700 கோடி மதிப்பிலான 46 திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இன்றைய நிகழ்ச்சியின்போது 6 வந்தே பாரத் ரயில்களையும், 2 அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அதில் கோவை - பெங்களூரு இடையிலான ரயிலும் ஒன்றாகும். அம்ரித் பாரத் என்பது புஷ் புல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை சூப்பர் பாஸ்ட் பாசஞ்சர் ரயில்கள் ஆகும். அதிநவீனப்படுத்தப்பட்டு இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


பிரதமர் வருகையைத் தொடர்ந்து அயோத்தி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்