அயோத்தி: அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று அயோத்தி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கட்டப்பட்டுள்ள அதி நவீன விமான நிலையத்தை தொடங்கி வைத்தார்.
அயோத்தி ராமர் கோவில் சர்வதசே அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் , உலக நாடுகளின் மக்களையும் அங்கு அதிக அளவில் கவரும் வகையிலான திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
அங்குள்ள ரயில் நிலையம் அதி நவீனமாக்கப்பட்டுள்ளது. ரூ. 240 கோடியில் ரயில் நிலையத்தை முற்றிலும் நவீனமாக மாற்றியமைத்துள்ளனர். மேலும் ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தியா தம் ஜங்ஷன் (அயோத்தி கோவில் சந்திப்பு) என்று மாற்றப்பட்டுள்ளது. லிப்ட்டுகள், எஸ்கலேட்டர்கள், வெயிட்டிங் ஹால், கிளாக் ரூம், உணவு பூங்கா உள்ளிட்டவையும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.

மிகவும் பாரம்பரியான முறையில் ரயில் நிலையத்தை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக ராமர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையிலான வடிவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் மணிமகுட வடிவம் அமைக்க்பட்டுள்ளது. மேலும் பெரிய வில் வடிவமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை முதலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அவர் கார் மூலமாக அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். வழியெங்கும் ஏராளமான மக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி பிரதமர் விமான நிலையம் சென்றார்.
அயோத்தி சர்வதேச விமான நிலையம்

அதேபோல அயோத்தியில் ரூ. 1450 கோடி செலவில் அதி நவீன சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டியுள்ளனர். 6500 சதுர அடி பரப்பளவில் விமான நிலையப் பகுதி அமைந்துள்ளது. வருடத்திற்கு 10 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் ராமாயாணம், ராமர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு முதல் கட்டமாக இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 6ம் தேதி முதல் இந்த விமான நிலையம் இயங்கத் தொடங்கும்.
6 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

இதுதவிர ரூ. 15,700 கோடி மதிப்பிலான 46 திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியின்போது 6 வந்தே பாரத் ரயில்களையும், 2 அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் கோவை - பெங்களூரு இடையிலான ரயிலும் ஒன்றாகும். அம்ரித் பாரத் என்பது புஷ் புல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை சூப்பர் பாஸ்ட் பாசஞ்சர் ரயில்கள் ஆகும். அதிநவீனப்படுத்தப்பட்டு இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பிரதமர் வருகையைத் தொடர்ந்து அயோத்தி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}