அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா.. வேட்டி கட்டி வந்து தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Jan 14, 2024,05:09 PM IST

டெல்லி:  மத்திய அமைச்சர் எல். முருகனின் டெல்லி வீட்டில் இன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழில் பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார்.


தைத் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர்களின் மாபெரும் திருவிழாவாகும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.  பொங்கல் விழாவை கடந்த சில நாட்களாகவே கல்வி நிலையங்கள், அலுவலகங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியிலும் இன்று பாஜக சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.




மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை  அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழர்களைப் போலவே வேட்டி கட்டிக் கொண்டு வந்திருந்தார் பிரதமர் மோடி. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என்று கூறி அவர் பேசவும் செய்தார்.


பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது,  நேற்று நாம் லோஹ்ரியை கொண்டாடினோம். இன்று சில பகுதி மக்கள் மகர சங்கராந்தியைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நாளை பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்கள். மாக் பிகு பண்டிகையும் வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பொங்கல் விழாவை எனது உறவினர்களுடன் குடும்பத்தினருடன் கொண்டாடுவது போல உணர்கிறேன்.  அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். இந்த நேரத்தில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வலிமையும் சிறந்து விளங்க நான் வாழ்த்துகிறேன். நாட்டின் ஒற்றுமையை பறை சாற்றும் விழாதான் இந்த பொங்கலும், மகர சங்கராந்தியும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.




தனது பேச்சின்போது,


'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளைச் சொல்லி அதற்குரிய விளக்கத்தையும் கொடுத்துப் பேசினார் பிரதமர் மோடி.


விழாவில்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகை மீனா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்