டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். எதைப் பற்றி அவர் பேசப் போகிறார் என்று தெரியவில்லை. அதேசமயம், ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதால் அதுகுறித்து அவர் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் எச்1 பி விசா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாலும், இந்தியர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், அச்சமும் எழுந்துள்ளதாலும் அதுகுறித்தும் கூட பிரதமர் மோடி பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பிரதமர் மோடி, 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முக்கிய அரசு முடிவுகளை அறிவிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். 2019-ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட பாலகோட் வான்வழித் தாக்குதல்களை அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்று வார கால ஊரடங்கை அறிவித்தார்.
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்தார். மே மாதத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்த முடிவை அறிவித்தார். 2025-ஆம் ஆண்டு மே 12 அன்று, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
இந்த வரிசையில் இன்றைய தொலைக்காட்சி உரையும் இணைகிறது. ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் நேரத்தில் இந்த உரை வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரியின் முதல் நாளில் இருந்து இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வரும். இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறையும். இது பண்டிகை காலத்தில் நுகர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் விலை குறையப்போகும் பொருட்களில், நெய், கெட்சப், காபி, பனீர் போன்ற சமையல் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் மருந்துகள் அடங்கும். கார்களுக்கான வரி விகிதங்கள் குறைந்துள்ளதால், பல கார் நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விதமான வரியாக உள்ளது. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இரண்டு விதமான வரிகளைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம். இது பெரும்பாலான பொருட்களை உள்ளடக்கும். எனினும், ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.என். ரவி, அண்ணாமலை இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.. விசிக கடும் தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி.. இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
BCCI தலைவராகிறார் மிதுன் மன்ஹாஸ்.. காஷ்மீரைச் சேர்ந்தவர்.. சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்
H-1B விசா குழப்பம்.. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் கட்டண உயர்வு.. அமெரிக்க அரசு விளக்கம்
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}