சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சேலம் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் ஒரே மேடையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை, பல்லடம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
கோவையில் நேற்று மாலை 5:45 மணிஅளவில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடுஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோவை டூ மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோவிலில் இருந்து ஆர் எஸ் புரம் வரை திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அன்று இரவு 7:30 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு சென்று அடைந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதியம் 1:30 மணி அளவில் பங்கேற்கிறார். இதற்காக 44 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி கே வாசன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்டதலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி சேலத்திற்கு வருவதை ஒட்டி, 3000 திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இது தவிர தனி பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}