புதுடில்லி: அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும் பணிக்கான திட்டத்தை இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, மின்தூக்கி, காத்திருப்பு அறை, மின்படிகட்டு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
1318 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 2ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துதற்கான பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் முக்கிய ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தில் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 32 ரயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சார்பில் தர்மபுரி, ஓசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ. 118 கோடிகளும், திருச்சூர் ரயில் நிலையம் ரூ. 384.81 கோடியிலும், செங்கனூர் ரயில் நிலையம் ரூ. 205 கோடியிலும் என ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன.
மற்ற ரயில் நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}