34  தமிழ்நாடு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி..  இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

Feb 26, 2024,12:17 PM IST

புதுடில்லி: அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலக தரத்தில்  மேம்படுத்தும் பணிக்கான திட்டத்தை  இன்று காணொளி வாயிலாக  தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.


தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, மின்தூக்கி, காத்திருப்பு அறை, மின்படிகட்டு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.




1318 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 2ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துதற்கான பணிகளை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைக்கிறார்.


இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் முக்கிய ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தில் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.


தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 32 ரயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சார்பில் தர்மபுரி, ஓசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ. 118 கோடிகளும், திருச்சூர் ரயில் நிலையம் ரூ. 384.81 கோடியிலும், செங்கனூர் ரயில் நிலையம் ரூ. 205 கோடியிலும் என ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன. 


மற்ற ரயில் நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்