ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் உள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று வழிபாடு செய்தார். அதேபோல அரிச்சல் முனை கடற்கரைக்கும் அவர் சென்று மலர் தூவி வழிபட்டார்.
தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி இன்று தனது 3வது நாள் பயணத்தைத் தொடங்கினார். காலையில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தனுஷ்கோடிக்குச் சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்தார். இங்கு வில்லேந்திய கோலத்தில் ராமர் சிலை அமைக்கப்பட்டிருக்கும். தற்போது அயோத்தியில் உள்ள ராமர் சிலையும் கூட இதே போலத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அங்கிருந்து அவர் அரிச்சல்முனை கடற்பகுதிக்குச் சென்றார். இந்தப் பகுதியிலிருந்துதான் கற்களால் ஆன பாலத்தை இலங்கைக்கு வானரப் படை கட்டியதாக கூறப்படுகிறது. இதுதான் ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது
அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி அங்கு மணலில் மலர்களைத் தூவி வணங்கினார். இந்த மலர் அஞ்சலியில் தாமரை மலர்களும் இடம் பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அசோக ஸ்தூபிக்கும் மலர் தூவி வணங்கினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் டெலஸ்கோப் மூலமாக அரிச்சல் முனையிலிருந்து கடலைப் பார்த்து ரசித்தார் பிரதமர் மோடி.
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!
பெண்ணாதிக்கம்!
{{comments.comment}}