தடையை மீறி போராட்டத்தில் குதித்த.. சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள்.. கூண்டோடு கைது

Jan 02, 2025,06:45 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு நீதி கேட்டு, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி போராட்டத்தில் ஈடுபட்டதால்,  சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.


கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். அதேபோல் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் தனது பங்கிற்கு ஆளுநரை சந்தித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருந்தார்.




நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.


இதற்கிடையை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்தப்படும் என சௌமியா அன்புமணி அறிவித்திருந்தார்‌. ஆனால் நுங்கம்பாக்கம் போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி தலைமையில், பசுமைத் தாயகம் அமைப்பினர், பாமக நிர்வாகிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சௌமியா அன்புமணி மற்றும் பாமக நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். 


இவர்கள் அனைவரும் வாகனத்தில் ஏற்றிய போதும் கூட பெண்களுக்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்து  சென்ற போலீசார் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்