- பா. பானுமதி
அழகுக்கு எல்லாம் அழகான அழகனை பார்
ஆபரணங்கள் சூடிய அந்த கண்ணனை பார்
இதயத்தை ஈர்க்கும் அந்த நேர்த்தியை பார்
ஈரத்திலே மின்னும் பச்சை வைரத்தை பார்
உலகமளந்து வெண்ணெய் தின்றவனைப் பார்
ஊரே கூடிக் கொண்டாடும் உத்தமனை பார்

எங்கள் மதுரை அரசியின் அண்ணனை பார்
ஏகாந்த வண்ணத்தில் கொள்ளையடிக்கும் கள்ளனைப்பார்
ஐந்துகோடி சூரியனாய் ஜொலிக்கும் அந்த ஜொலிப்பை பார்
ஒய்யாரமாக வந்து மதுரையை குலுக்குவதைப் பார்
ஓவியமா காவியமா என்று உலகம் திகைப்பதைப்பார்
ஔடதம் ஆகி அனைவரையும் உய்விப்பதை பார்
கள்ளழகா கட்டழகா காண்பவரை கட்டி இழுக்கும் பேரழகா
சொல் அழகா சுந்தரா சொக்கிப் போனேன் உன் அழகில்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}