"கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக".. வைரமுத்து வாழ்த்து!

Apr 30, 2023,11:14 AM IST
சென்னை: மறைந்த முதல்வர்  கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் முக்கியமாக கடலில் பேனா சிலை வைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சின்னத்தை வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இருப்பினும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வேலைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவுச் சின்னம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றைத் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலிலும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக - என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?

news

கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்

news

பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை

news

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!

news

பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்

news

வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!

news

தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்