"கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக".. வைரமுத்து வாழ்த்து!

Apr 30, 2023,11:14 AM IST
சென்னை: மறைந்த முதல்வர்  கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் முக்கியமாக கடலில் பேனா சிலை வைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சின்னத்தை வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இருப்பினும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வேலைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவுச் சின்னம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றைத் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலிலும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக - என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

news

ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

news

இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

news

தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!

news

சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

news

பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?

news

மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்