"கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக".. வைரமுத்து வாழ்த்து!

Apr 30, 2023,11:14 AM IST
சென்னை: மறைந்த முதல்வர்  கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் முக்கியமாக கடலில் பேனா சிலை வைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சின்னத்தை வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இருப்பினும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வேலைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவுச் சின்னம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றைத் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலிலும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக - என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்