"கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக".. வைரமுத்து வாழ்த்து!

Apr 30, 2023,11:14 AM IST
சென்னை: மறைந்த முதல்வர்  கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் முக்கியமாக கடலில் பேனா சிலை வைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சின்னத்தை வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். இருப்பினும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வேலைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவுச் சின்னம் தொடர்பான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்று கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றைத் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலிலும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக - என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. 7 விக்கெட்களுக்கு 175 ரன்கள்

news

பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!

news

நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!

news

சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!

news

அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?

news

அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்‌ கோவில் மலைப்பயணம்!

news

Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

news

சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்