சென்னை: காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையின் முன் முயற்சியாக பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவலன் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் உதவி க்யூ ஆர் கோடு திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அப்போது ஆட்டோவில் முறையாக qr கோடு ஒட்டப்பட்டுள்ளதா என்பதை தானே களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்.

சென்னையில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோக்கள், மற்றும் வாடகை கார்களில் காவல் உதவி க்யூ ஆர் கோடு வழங்கப்படுகிறது.
காவல்துறை உதவி QR code ஒட்டிய ஆட்டோக்கள், வாடகை கார்களில் பயணிப்பவர்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேகமான யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களோ, அவசரநிலை ஏற்பட்டாலோ இந்த க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, sos பட்டனை அழுத்தினால் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் ஆட்டோ சென்று கொண்டிருக்கும் இடம், ஆட்டோ உரிமையாளரின் விபரம், போன்றவை குறித்த முழு விவரங்களும் தெரியவரும். மேலும் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உடனடி உதவியை பெறவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}