சென்னை: காவல் உதவி qr கோடு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையின் முன் முயற்சியாக பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவலன் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் உதவி க்யூ ஆர் கோடு திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அப்போது ஆட்டோவில் முறையாக qr கோடு ஒட்டப்பட்டுள்ளதா என்பதை தானே களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்.
சென்னையில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோக்கள், மற்றும் வாடகை கார்களில் காவல் உதவி க்யூ ஆர் கோடு வழங்கப்படுகிறது.
காவல்துறை உதவி QR code ஒட்டிய ஆட்டோக்கள், வாடகை கார்களில் பயணிப்பவர்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேகமான யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களோ, அவசரநிலை ஏற்பட்டாலோ இந்த க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, sos பட்டனை அழுத்தினால் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் ஆட்டோ சென்று கொண்டிருக்கும் இடம், ஆட்டோ உரிமையாளரின் விபரம், போன்றவை குறித்த முழு விவரங்களும் தெரியவரும். மேலும் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உடனடி உதவியை பெறவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
{{comments.comment}}