பூமியைத் தாக்கிய அதி தீவிர சூரியப் புயல்.. பல பகுதிகளில் மின் கட்டமைப்பு, தகவல் தொடர்புகள் பாதிப்பு

May 11, 2024,05:09 PM IST

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மின் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டாஸ்மானியா முதல் இங்கிலாந்து வரை இந்த சூரியப் புயலை ஒளிக் கதிர் வீச்சுக்களாக மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூரியப் புயலால் செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


கிரீன்வீச் நேரப்படி  வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சூரியப் புயலானது பூமியைத் தாக்கத் தொடங்கியது.  இது முதலில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இது அதி தீவிரத் தாக்குதலாக இதை விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இந்த சூரியப்புயலால், கடந்த 2003ம் ஆண்டு ஸ்வீடனில் மிகப் பெரிய மின் வெட்டு ஏற்பட்டு நாடே இருளில் மூழ்கியது.  அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம்.  வரும் நாட்களில் இதுபோன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.




இதற்கிடையே, வடக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலசியா ஆகிய நாடுகளில் வானில் வெடித்துக் கிளம்பிய சூரியக் கதிர் வீச்சை மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர். பிரமாண்டமான வான வேடிக்கை போல இது இருந்தது. வெறும் கண்களாலேயே இதைக் காண முடிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இயற்கையின் விந்தை இதுதான்!


இதற்கிடையே, சூரியல் புயல் காரணமாக செயற்கைக் கோள்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல  விமானங்களையும் பாதுகாப்பாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரியனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சானது விநாடிக்கு 800 கிலோமீட்டர் என்ற  வேகத்தில் வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்