வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மின் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மானியா முதல் இங்கிலாந்து வரை இந்த சூரியப் புயலை ஒளிக் கதிர் வீச்சுக்களாக மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூரியப் புயலால் செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிரீன்வீச் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சூரியப் புயலானது பூமியைத் தாக்கத் தொடங்கியது. இது முதலில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இது அதி தீவிரத் தாக்குதலாக இதை விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இந்த சூரியப்புயலால், கடந்த 2003ம் ஆண்டு ஸ்வீடனில் மிகப் பெரிய மின் வெட்டு ஏற்பட்டு நாடே இருளில் மூழ்கியது. அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம். வரும் நாட்களில் இதுபோன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, வடக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலசியா ஆகிய நாடுகளில் வானில் வெடித்துக் கிளம்பிய சூரியக் கதிர் வீச்சை மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர். பிரமாண்டமான வான வேடிக்கை போல இது இருந்தது. வெறும் கண்களாலேயே இதைக் காண முடிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இயற்கையின் விந்தை இதுதான்!
இதற்கிடையே, சூரியல் புயல் காரணமாக செயற்கைக் கோள்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல விமானங்களையும் பாதுகாப்பாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரியனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சானது விநாடிக்கு 800 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}