வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மின் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மானியா முதல் இங்கிலாந்து வரை இந்த சூரியப் புயலை ஒளிக் கதிர் வீச்சுக்களாக மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூரியப் புயலால் செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிரீன்வீச் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சூரியப் புயலானது பூமியைத் தாக்கத் தொடங்கியது. இது முதலில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இது அதி தீவிரத் தாக்குதலாக இதை விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இந்த சூரியப்புயலால், கடந்த 2003ம் ஆண்டு ஸ்வீடனில் மிகப் பெரிய மின் வெட்டு ஏற்பட்டு நாடே இருளில் மூழ்கியது. அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம். வரும் நாட்களில் இதுபோன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, வடக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலசியா ஆகிய நாடுகளில் வானில் வெடித்துக் கிளம்பிய சூரியக் கதிர் வீச்சை மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர். பிரமாண்டமான வான வேடிக்கை போல இது இருந்தது. வெறும் கண்களாலேயே இதைக் காண முடிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இயற்கையின் விந்தை இதுதான்!
இதற்கிடையே, சூரியல் புயல் காரணமாக செயற்கைக் கோள்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல விமானங்களையும் பாதுகாப்பாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரியனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சானது விநாடிக்கு 800 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}