வேலூர்: வேலூரில் உள்ள பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேலூர் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 1 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேலூர் வருகையினை முன்னிட்டு 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
{{comments.comment}}