4வது முறையாக தேசியக் கொடியேற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

Jan 26, 2026,11:05 AM IST

- வ. சரசுவதி


டெல்லி: குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு 4வது முறையாக இந்தியாவின் கடமைப் பாதையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.


திரெளபதி முர்மு, இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 25 ஜூலை 2022 அன்று பதவியேற்ற அவர், இந்த உயரிய பதவியை அடைந்த முதல் பழங்குடியினப் பெண் என்பதுடன், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை எளிமை, உழைப்பு, பொது சேவை ஆகியவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


திரௌபதி முர்மு 20 ஜூன் 1958 அன்று ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் கிராமத்தில் பிறந்தார். எளிய குடும்பத்தில் வளர்ந்த அவர், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தனது வாழ்க்கையை ஆசிரியராகத் தொடங்கினார். இது அவரின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க உதவியது.


பின்னர் அரசியலில் ஈடுபட்ட திரௌபதி முர்மு, ஒடிசா மாநில அரசில் அமைச்சராக பணியாற்றினார். 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிறப்பாக சேவை செய்தார். ஆளுநராக இருந்த காலத்தில், பழங்குடியின மக்களின் உரிமைகள், கல்வி, சமூகநலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார்.




2022 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு, இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய மைல்கல்லை அமைத்தார். அவரது தேர்வு, பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அரசியலமைப்பை பாதுகாப்பது, ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துவது, சமூக ஒற்றுமையை பேணுவது ஆகியவை அவரது முக்கியக் கடமைகளாக உள்ளன.


திரெளபதி முர்முவின் வாழ்க்கை, சாதாரண பின்னணியில் பிறந்தவரும் கடின உழைப்பின் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. அவர் இன்று இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண் மாணவிகளுக்கும், பழங்குடியின சமூகத்தினருக்கும் ஒரு பெரிய ஊக்கமாக திகழ்கிறார்.


திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பது, ஜனநாயகத்தின் விரிவையும் சமத்துவத்தின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது. அவரது எளிமையான வாழ்க்கையும், அர்ப்பணிப்பான பொதுச் சேவையும் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்க்கின்றன.


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்.. குடியரசு தின விழா!

news

சோழர் காலத்தில் செழித்தோங்கிய மக்களாட்சி.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடவோலை முறை!

news

சுதந்திர இந்தியா குடியரசு நாடாக மாறிய வரலாறு!

news

4வது முறையாக தேசியக் கொடியேற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

news

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்.. தேசத்தை வழிநடத்திய ஆளுமைகள்.. ஒரு பார்வை!

news

77வது குடியரசு தினம்.. டெல்லியில் விழாக்கோலம்.. கடமைப் பாதையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்