மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

Jan 25, 2026,08:30 PM IST

டில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே குடியரசு தின உரையை நிகழ்த்தி உள்ளார். 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குடிமக்களின் பங்களிப்பைப் போற்றி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் விபரம் இதோ...


நாட்டின் 77வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில்,  "நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களே நமது குடியரசை வரையறுக்கின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அதன் சட்டப்பிரிவுகள் மூலம் தேசியவாத உணர்வுக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர்.


சிறந்த தேசியக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியார், 'வந்தே மாதரம் என்போம்' என்ற பாடலைத் தமிழ் மொழியில் இயற்றி, வந்தே மாதரம் என்ற தாரக மந்திரத்தை மக்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றார். இந்தப் பாடலின் பிற மொழிபெயர்ப்புகளும் மிகவும் பிரபலமானவை. ஸ்ரீ அரவிந்தர் இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் உருவாக்கப்பட்ட 'வந்தே மாதரம்' நமது தேசத்தின் இதயம் கனிந்த பிரார்த்தனை பாடலாகும்.




ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்தநாளை நாடு 'பராக்ரம் திவாஸ்' (வீர தினம்) எனக் கொண்டாடியது. இளைஞர்கள் அவரது தேசபக்தியிலிருந்து ஊக்கம் பெற வேண்டும். அவரது 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நமது தேசிய பெருமிதத்தின் பிரகடனம். நமது நாட்டுப் பெண்கள் பாரம்பரியத் தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். விவசாயம் முதல் விண்வெளி வரை, சுயவேலைவாய்ப்பு முதல் ஆயுதப்படை வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டுத் துறையில் நமது மகள்கள் உலகளாவிய சாதனைகளைப் படைத்துள்ளனர் (மகளிர் கிரிக்கெட் மற்றும் செஸ் போட்டிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்)."


நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றும் பல்வேறு தரப்பினருக்குக் குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார். எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறை. உணவு வழங்கும் விவசாயிகள். மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள். சிக்கிள் செல் அனீமியா (Sickle Cell Anaemia) ஒழிப்புத் திட்டம் மற்றும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் மூலம் பழங்குடியின சமூகங்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய கே.சி.வீரமணி: மீண்டும் பரபரப்பு

news

கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்

news

என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்

news

நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்

news

இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு

news

அனாதைகள் யாருடைய குழந்தைகள்???

news

நன்றொன்று உண்டென்று

news

சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!

அதிகம் பார்க்கும் செய்திகள்