வாஷிங்டன் விமான விபத்துக்குக் காரணமே இவங்கதான்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்ட ஒரே போடு!

Jan 31, 2025,12:21 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.


அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமான மற்றும் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்டு போடோமேக்  ஆற்றில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்கள், விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் மற்றும் 60 பயணிகள் என மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ‌ இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


ஹெலிகாப்டரும் விமானமும் மோதி ஆற்றில் விழுந்த பயணிகளையும் மீட்க அந்நாட்டு அரசு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதேபோல் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




பிஎஸ்ஏ ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால் இந்த விபத்து குறித்து அமெரிக்க அரசு   தகவல் வெளியிடாமல் மௌனமாகவே இருந்தது.


இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான விபத்திற்கு காரணம் முந்தைய ஆட்சியாளர்களே என குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குறைந்த தகுதி வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த வழிவகுத்ததே இந்த  விபத்துக்கு காரணம். நான் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கிறேன். ஒபாமா, பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் கொள்கைக்கு முதலிடம் கொடுத்தனர் என கூறியுள்ளார் டிரம்ப்.


கவுண்டமணி நடிச்ச ஒரு படத்தில் ஒரு வசனம் வரும்.. எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் அப்படின்னு.. அந்த மாதிரி, தற்போது நடக்கும்  தவறுகளுக்கு இதுக்கு முன்னாடி இருந்தவங்கதான் காரணம் என்று இந்திய அரசியல்வாதிகள் மாதிரி டிரம்ப் பேச ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்