அரசு பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து.. தினசரி இதே பஞ்சாயத்தா போச்சே.. மக்கள் அதிருப்தி!

Jan 20, 2024,05:09 PM IST
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து எஸ்.பி.பட்டிணம் செல்லும் அரசுப் பேருந்துகளை, தனியார் பேருந்துக்காரர்கள் நடு வழியில் தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த "டைமிங்" பிரச்சினைதான். காரைக்குடி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல நேரங்களில் அந்த டைமுக்கு பஸ்களை எடுக்காவிட்டால் அரசு மற்றும் தனியார் பேருந்து டிரைவர்களிடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான்.



ஆனால் இப்போது புதுவித பிரச்சினை உருவாகியுள்ளதாம். அதாவது அரசு பஸ், தன்னை முந்திக் கொண்டு போய் விட்டால், தனியார் பேருந்து டிரைவர்கள் சண்டைக்கு வருகிறார்களாம். இதுபோன்ற சம்பவங்கள் காரைக்குடியிலிருந்து தினசரி காலையில் எஸ்.பி.பட்டிணம்  செல்லும் அரசு பேருந்துகளுக்கு ஏற்படுகிறதாம்.

அதாவது தங்களை முந்திக் கொண்டு அரசு பஸ் போய் விட்டால், உடனே வேகமாக போய் அதைத் தடுத்து நிறுத்தி, நடு ரோட்டிலேயே நிறுத்தி, ஏன் இப்படி முந்திட்டுப் போறீங்க என்று அரசு டிரைவருடன், தனியார் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நடு ரோட்டில் இப்படி பஸ்ஸை நிறுத்தி பிரச்சினை செய்வதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோர் கடும் பாதிப்பும், அதிருப்தியும் அடைகின்றனர்.



காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் தனியார் பேருந்து ஒன்று, செஞ்ஜை  பகுதியில் நேற்று அரசு பேருந்தை இதுபோல வழிமறித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெரும்பான்மையான பொதுமக்கள் இதன் மூலம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாதத்தில் பெரும்பான்மையான நாட்கள் இதுபோன்று நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தனியார் பேருந்தின் இதுபோன்ற  செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது எப்போது ? விபத்து ஏதும்  ஏற்படும் முன்பு  இந்த நிலை சரிசெய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, தவறு செய்வோரை சரியான முறையில் கண்டிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்