மிடுக்கான பார்வை கண்டு திடுக்குன்னு தான் விழிக்கிறேன்!

Sep 02, 2026,01:24 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


கனவில் வந்த தேவதையை

காண எண்ணி ஓடுகிறேன்


தொட்டுவிட்டு போனவளை

தொலைத்த இடம் தேடுகிறேன்


பட்டு வண்ண 

மேனி அவள்


பாத்த இடம் 

தெரியலே


விட்டு விட்டு 

போன அவளின்


விவரம் ஒன்னும் 

புரியலே




நிலவு போல 

தேய்கிறேன்


நிம்மதி தான் 

கிடைக்கலே


நித்தம் நித்தம் 

நினைவில் வந்தும்

நெனச்சது நடக்கலே


பகலில் தோன்றும் 

வானவில்லை


பார்க்க மனம் 

ஏங்குதே


பார்த்து படம் 

பிடிக்கும் முன்னே


படக்குன்னு தான் 

மறையுதே


சொடுக்குப் போட்ட 

சுந்தரியே


சொப்பனத்தில் பார்க்கிறேன்


மிடுக்கான பார்வை கண்டு


திடுக்குன்னு தான் 

விழிக்கிறேன்


கனவில் வந்த கன்னிக்குத் தான்


காதல் வலை விரிக்கிறேன்


காரிகையை கைபிடித்து 

கல்யாணம் முடிக்கிறேன்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மிடுக்கான பார்வை கண்டு திடுக்குன்னு தான் விழிக்கிறேன்!

news

ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்

news

கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!

news

வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்

news

திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது.. திமுக முப்பெரும் விருதுகள் அறிவிப்பு

news

World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!

news

செம்மொழியான தமிழ் மொழியே

அதிகம் பார்க்கும் செய்திகள்