சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெறவுள்ளோர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளைப் பெறவுள்ளோரை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விருது பெறுவோர் விவரம்:
பெரியார் விருது - கு. செல்லப்பா, திமுக விவசாய அணி துணைச் செயலாளர்
அண்ணா விருது - சேலம் ஜி.கே.சுபாஷ், சேலம் மாவட்ட மத்திய அவைத் தலைவர்
கலைஞர் விருது - திமுக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான
திருச்சி சிவா, எம்.பி

பாவேந்தர் விருது - திமுக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு.
பேராசிரியர் விருது - திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது - திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது.. திமுக முப்பெரும் விருதுகள் அறிவிப்பு
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
{{comments.comment}}