சென்னை: தொகுதி மறு சீரமைப்பு மற்றும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.
கடந்த மார்ச் ஐந்தாம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து கட்சிகளைத் தவிர தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. அப்போது அனைத்து கட்சியின் முன்னிலையில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்திட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு முன்மொழிந்தனர். அதன்படி, தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பை கண்டித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் மார்ச் 12ஆம் தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தொகுதி மறு சீரமைப்பு, தேசிய கல்விக் கொள்கை எனும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டங்கள் மூலமாக மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதேபோல் குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துறைமுருகனும், திருச்சி பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேருவும், திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}