புதுச்சேரி: லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்று இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் பாஜக சார்பில் டிஜிட்டல் வேன் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதற்கு பாஜக பல விதங்களிலும் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பு தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோவிலை கட்டி முடித்து விட்டது. இதோ திறப்பு விழாவும் வந்து விட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதத்தையும் தொடங்கி விட்டார். ஜனவரி 22ம் தேதி ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்த விழா, பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் மிகப் பெரிய துருப்புச் சீட்டாக இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி பாஜக சார்பில் அதிரடியான பிரச்சாரம் இன்று முதல் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் நவீன டிஜிட்டல் வேன் ரெடியாகியுள்ளது. ரூ. 25 லட்சம் பொருட் செலவில் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலன்கள், யார் யாருக்கு எந்தெந்த திட்டம் என்ற விவரம் விரிவாக விளக்கி வீடியோ காட்சியாக இடம் பெற்றுள்ளது.
இந்த டிஜிட்டல் வேனை புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுக்க அனுப்பி மக்களிடையே பாஜக அரசின் சாதனைகளை கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த வேனை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}