டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என்று பேச்சு அடிபடும் நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
முதல் IPL சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, IPL 2025 இன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக செய்திகள் உலா வருகின்றன. அவரை அணிக்குள் கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் விரும்புகின்றன. இந்த நிலையில் திடீரென ராகுல் டிராவிட் ஏன் விலகினார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2011ம் ஆண்டு ராகுல் டிராவிட் வீரராக இணைந்து 3 சீசன்கள் விளையாடினார். பின்னர் 2013 முதல் அவர் பயிற்சியாளராக மாறினார். 2 சீசன்கள் பயிற்சியாளராக நீடித்தார். 2015 முதல் 2024 வரை பிசிசிஐயின் ஒப்பந்தத்திற்குப் போனதால் அவர் ஐபிஎல் பக்கம் வரவில்லை. இடையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் டிராவிட் இருந்தார். 2024ல் டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார்.
அதன் பின்னர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார். இருப்பினும் 2025 சீசன் மட்டுமே அவர் பயிற்சியாளராக நீடித்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஜெயித்து புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து வெளியேறியது என்பது நினைவிருக்கலாம்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}