தமிழகத்தில்.. 24ம் தேதி வரை.. கனமழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு!

Jun 19, 2024,04:06 PM IST
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயிலில் தகித்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் கழித்து மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.


இது தவிர சென்னையில் இரண்டாவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.மேலும் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமலும்,14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும்  திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் ஜூன் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தென் இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக 16 சதவீதம் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று திருவொற்றியூரில் 85 மி.மீ மழை பதிவானது. அமைந்த கரையில் 65 மி.மீ மற்றும் தேனாம்பேட்டையில் 62 மி.மீ மழையும் பெய்துள்ளது .

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்