தமிழகத்தில்.. 24ம் தேதி வரை.. கனமழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு!

Jun 19, 2024,04:06 PM IST
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயிலில் தகித்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் கழித்து மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.


இது தவிர சென்னையில் இரண்டாவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.மேலும் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமலும்,14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும்  திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் ஜூன் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தென் இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக 16 சதவீதம் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று திருவொற்றியூரில் 85 மி.மீ மழை பதிவானது. அமைந்த கரையில் 65 மி.மீ மற்றும் தேனாம்பேட்டையில் 62 மி.மீ மழையும் பெய்துள்ளது .

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்