சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுது்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1250 ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து பகுதிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். ஓடும் ரயில்களிலும் போலீசார் சோதனையும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}