75வது குடியரசு தின விழா.. தமிழ்நாடு முழுவதும்.. ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!

Jan 25, 2024,05:16 PM IST

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை  எச்சரித்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




மாநிலங்களில்  உள்ள ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுது்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.


ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1250 ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ரயில் நிலையங்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து பகுதிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். ஓடும் ரயில்களிலும் போலீசார் சோதனையும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுக்கும்  வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்