75வது குடியரசு தின விழா.. தமிழ்நாடு முழுவதும்.. ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!

Jan 25, 2024,05:16 PM IST

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை  எச்சரித்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




மாநிலங்களில்  உள்ள ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுது்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.


ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1250 ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ரயில் நிலையங்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து பகுதிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். ஓடும் ரயில்களிலும் போலீசார் சோதனையும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுக்கும்  வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்