- மொழிப்பித்தன் இரா.ச. குமார்
தூறல்தான் தூறிக்கொண்டிருக்கிறது
இன்னும்
அடித்து பெய்ய
ஆரம்பிக்கவில்லை...
காகிதத்தில்
கப்பல் தயார்
பெய்யப்போகும்
மழைக்காகவே காத்திருப்பு...
மழை நேரத்தில்
ஜன்னலை மூடி
சாரலை
புறக்கணிக்கப்போவதில்லை...

தற்சமயம்
கற்றுக்கொள்ள வேண்டியதென்னவோ
பெரும் மழை வருவதற்குள்
துரிதமாக துளிகளை
எண்ணி முடிக்கும் வித்தை...
இந்த தூறலுக்கே
துவண்டு தொங்கும் இலை மழைத்துளிகளின் கணம்
தாங்குமா?..
நனைந்து
கரைந்துப்போகவும் தயார்
வானம் இனி
கொட்டித்தீர்த்தால் சரி...
கருமுகிலை கலைத்து
இந்த இடம் தாண்டி
வெகுதூரம்
இழுத்து போய்விடக்கூடாது...
குடை உள்ளே இருக்கட்டும்
மழையை
வரவேற்க வாசலுக்கு வரவும்...
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
ஒரு மழை நாளிலிருந்து!
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
என் தனிமையின் பேரழகு
{{comments.comment}}