- மொழிப்பித்தன் இரா.ச. குமார்
தூறல்தான் தூறிக்கொண்டிருக்கிறது
இன்னும்
அடித்து பெய்ய
ஆரம்பிக்கவில்லை...
காகிதத்தில்
கப்பல் தயார்
பெய்யப்போகும்
மழைக்காகவே காத்திருப்பு...
மழை நேரத்தில்
ஜன்னலை மூடி
சாரலை
புறக்கணிக்கப்போவதில்லை...

தற்சமயம்
கற்றுக்கொள்ள வேண்டியதென்னவோ
பெரும் மழை வருவதற்குள்
துரிதமாக துளிகளை
எண்ணி முடிக்கும் வித்தை...
இந்த தூறலுக்கே
துவண்டு தொங்கும் இலை மழைத்துளிகளின் கணம்
தாங்குமா?..
நனைந்து
கரைந்துப்போகவும் தயார்
வானம் இனி
கொட்டித்தீர்த்தால் சரி...
கருமுகிலை கலைத்து
இந்த இடம் தாண்டி
வெகுதூரம்
இழுத்து போய்விடக்கூடாது...
குடை உள்ளே இருக்கட்டும்
மழையை
வரவேற்க வாசலுக்கு வரவும்...
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
மெய்நட்பு!
பழி சொல்லாத நிழல் நீ .. நட்பு!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
நிழலாக நீயும் நிசமாக நானும்!
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
{{comments.comment}}