மும்பை: விராட் கோலி இந்திய அணியில் முதல் முறையாக விளையாடியபோது எல்லா வீரர்களும் சேர்ந்து என் காலில் விழு.. அப்போதான் நீ பெரிய ஆளாக முடியும் என்று அவரைக் கிண்டலடித்து கலாய்த்தனர். இன்று அதே விராட் கோலி எனது சாதனையை முறியடித்திருப்பது மிக மிக மகிழ்ச்சி தருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று தனது 50வது சதத்தை விளாசி புதிய சாதனையைப் படைத்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையை அவர் சச்சினின், மும்பை மைதானத்தில் வைத்தே, அவர் முன்னிலையிலேயே முறியடித்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி நிகழ்த்திய இந்த வரலாற்று சாதனையை சச்சின் டெண்டுல்கர் நேரில் கண்டு ரசித்து கை தட்டி வரவேற்று மகிழ்ந்தார். சதம் அடித்து முடித்ததும், விராட் கோலி இரு கைகளையும் கீழே போட்டு சச்சினை நோக்கி வணங்கி தனது சாதனையை அவருக்கு அர்ப்பணம் செய்தார்.
விராட் கோலியின் இந்த சாதனை குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரிய சாதனை. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பையில் இந்த சாதனை நடந்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. விராட் கோலி முதல் முறை இந்திய அணியில் சேர்க்கப்பட்டபோது, டிரஸ்ஸில் ரூமில் நடந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
அப்போது எல்லா வீரர்களும் சேர்ந்து எனது காலில் விராட் கோலியை விழச் சொன்னார்கள். அப்போதுதான் நீ பெரிய ஆளாக முடியும் என்று கிண்டலடித்தனர். அவர்களது கேலி கிண்டலைப் பார்த்து நான் சிரித்தேன்.. இன்று அதே வீரர் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருப்பது மிகப் பெரிய சாதனை.. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சச்சின் டெண்டுல்கர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}