INDIA alliance in UP: சமாஜ்வாடி 63, காங். 17.. அமேதி, ரேபரேலி, வாரணாசி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி

Feb 21, 2024,09:58 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சமாஜ்வாடிக் கட்சி 63 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.


இந்தியா கூட்டணியில், உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இந்திய கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.




காங்கிரஸுக்கு 15 தொகுதிகள்தான் என்று அகிலேஷ் யாதவ் கூறி வந்தார். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதிருப்தியுடன் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளன. அகிலேஷ் யாதவை, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடிவடைந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.


அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த உடன்பாட்டின் மூலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த முறை இந்தியா கூட்டணி வலுவான ஒரு போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம்:


ரேபரேலி, அமேதி, கான்பூர் நகர், பதேபூர் சிக்ரி, பசகோவன், சஹரன்பூர், பிரக்யாராஜ், மகாராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த் சாகர், காஸியாபாத், மதுரா, சீதாபூர், பாராபங்கி, தியோரியா, வாரணாசி.


கடந்த லோக்சபா தேர்தலின் போது இந்த கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படுவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு கடைசிவரை கூட்டணி முடிவாகாமல் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளே புகுந்து விளையாடிவிட்டது பாஜக. இந்த முறை முன்கூட்டியே உடன்பாட்டை முடித்துக் கொண்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு கடும் போட்டியை இந்தியா கூட்டணி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்று மாலை வெளியானது. முன்னதாக, தொகுதி பங்கீடு தொடர்பாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்தும் நன்றாக உள்ளன. அனைத்தும் நன்றாக முடிந்துள்ளன. கூட்டணி கண்டிப்பாக உண்டு. எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் எல்லாம் தெளிவாக தெரிய வரும் என்று தெரிவித்தார். இதன் மூலம் சுமூகமாக சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.


ரேபரேலி, அமேதியில் யார் போட்டி?




கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேசமயம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதி, ரேபரேலி தொகுதிகள் காந்தி குடும்பத்திடமே தொடர்ந்து இருந்து வந்தன. அதில் அமேதியை தற்போது பாஜக தன் வசப்படுத்தி விட்டது. ரேபரேலி மட்டுமே மிஞ்சியுள்ளது.


இந்த முறை சோனியா காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜசபா எம்.பியாகிவிட்டார். எனவே ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அமைதி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்