"சாமியே சரணம்".. விறுவிறுப்படையும் ஐயப்பன் சீசன்.. கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

Nov 24, 2023,11:33 AM IST

கொல்லம்:  ஜயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ள நிலையில்,  கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.


கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து.. வருடா வருடம் கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் சீசன் தான் நினைவுக்கு வரும். கார்த்திகை மாதத்தையும் ஐயப்பனையும் பிரிக்க முடியாது. அத்தகைய சீசன் தான் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 


மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 16ம் தேதியே திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால்  கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.




இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: 

   

செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிச 8, ஜன 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச 24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன 7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன 10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 


மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து  கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும் டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 


மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31,ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17,24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 


இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி,ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்