சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 2026 ஐபிஎல் தொடரின்போது வேறு அணியில் விளையாடுவார் என்ற பேச்சு வலுத்துள்ளது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
2018 மெகா ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்த சாம்சன், 2021 முதல் கேப்டனாக இருக்கிறார். 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கும் கொண்டு சென்றார். கடந்த மெகா ஏலத்தில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 18 கோடிக்குத் தக்கவைத்தது.

இந்த நிலையில் அடுத்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற மாட்டார் என்று சொல்கிறார்கள். சாம்சன் வெளியேற விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் விட்டுத் தருமா என்ற கேள்விவியும் எழுந்துள்ளது. ஒருவேளை சஞ்சுவைத் தர விரும்பினால் அதற்குப் பதில் சென்னை அணியின் வலுவான வீரர்கள் யாரையாவது ராஜஸ்தான் கேட்கலாம். குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை அது கேட்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
இதில் ஜடேஜா ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். துபேவும் கூட ஆடியுள்ளார். ருத்துராஜ் ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் போவதாக இருந்தால், சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக்கவும் வாய்ப்புள்ளது.
இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எனது பார்வையில் சுதந்திரம்
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
{{comments.comment}}