- சசிகலா விஸ்வநாதன்
(அழகியசிங்கர் வென்பா)
முந்தை வினை முன்னின்று இழுக்க
பின்னை வினைகள் பின்னின்று தள்ள
என்னென்று சொல்லி நான் நொந்தேன்;
நம் வாழ்க்கை நம் கையில்?
உற்றோரும் உலகோரும் உதைத்து தள்ளும்
உருண்டு ஓடும் பந்து போல்
வெருண்ட நான், எங்கனம் நினைப்பேன்;
நம் வாழ்க்கை நம்கையில்?
பாசமுடன் பிள்ளைகளைப் பெற்று, வளரும்
பிள்ளைளே இரவும் பகலும் நினைவில்.
பின்னரும் நான் எப்படி பகருவேன்;
நம் வாழ்க்கை நம்கையில்.

கல்யாண நாள் முதல் கண்ணசைவில்
கட்டளைகள் பிறக்க, அடிபணியும்
நான் எப்படி சொல்வேன், இன்று;
நம் வாழ்க்கை நம் கையில்
நின்றாலும்; அத்தனையும் மறையும்; அத்தனவன்
அருளால், என்றிருக்க; நான் சொல்வேன்
நம் வாழ்க்கை நம்கையில்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை
An Empty Wallet.. காலியான பணப்பை!
Being Successful.. நிச்சயம் வெற்றி உன்னதே
I got stunned by.. 2 தலையா.. நான் அப்படியே ஷாக்காயிட்டேன்!!
நம் வாழ்க்கை நம் கையிலா?
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
{{comments.comment}}