நம் வாழ்க்கை நம் கையிலா?

Jul 28, 2026,04:19 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


(அழகியசிங்கர் வென்பா)


முந்தை வினை முன்னின்று இழுக்க

பின்னை வினைகள் பின்னின்று தள்ள

என்னென்று  சொல்லி நான் நொந்தேன்;

நம் வாழ்க்கை நம் கையில்?


உற்றோரும் உலகோரும் உதைத்து தள்ளும்

உருண்டு ஓடும் பந்து போல்

வெருண்ட நான், எங்கனம்  நினைப்பேன்;

நம் வாழ்க்கை நம்கையில்? 


பாசமுடன் பிள்ளைகளைப் பெற்று, வளரும்

பிள்ளைளே இரவும் பகலும்  நினைவில்.

பின்னரும் நான் எப்படி பகருவேன்;

நம் வாழ்க்கை நம்கையில். 




கல்யாண நாள் முதல் கண்ணசைவில்

கட்டளைகள் பிறக்க, அடிபணியும்

நான் எப்படி சொல்வேன், இன்று;

நம் வாழ்க்கை நம் கையில்


எத்தனை இடையூறு வந்து எதிர்

நின்றாலும்; அத்தனையும் மறையும்;  அத்தனவன்

அருளால், என்றிருக்க; நான் சொல்வேன்

நம் வாழ்க்கை நம்கையில்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்