- சசிகலா விஸ்வநாதன்
புலர்ந்தும் புலராத
காலைப் பொழுது
விடிவெள்ளி மயங்கி
விரியும் சூரியன்
சற்றே தாமதமாக வரட்டுமே...
இன்று ஒரு நாள்!
அதிகாலை சாரலின் ஓசை;
சலங்கை ஒலி போல்
இளங்காற்றில் சாமரம் வீசும் தென்னை;
பவளமல்லியின் வாசம்;
படுக்கையின் கதகதப்பு;
போர்வையின் இருட்டிலும்;
தேன்சிட்டுக்குருவியின்
கொஞ்சும் கீச்சலின் இனிமை தடைபட்டது.

ஸ்டீஃபனின் சீட்டி ஒலியுடன்
செய்தி தாள் விழும் ஒலி;
தொடர்ந்து
பால் பாக்கெட் விழும் சப்தம்;
முன் வாயில் கேட்
'க்றீச்' ஒலி
கெங்கம்மாவின் வருகை.
"ஏங்க! " அவளின் குரல்;
காஃபி ரெடி
காலை புலர்ந்ததை அறிவித்ததாகி விட்டது.
அப்படியும்....
கண்மூடி படுத்திருந்தவன்
நெஞ்சின் மேல் இதமாக
பூனைக்குட்டி போல், விழுந்த மகள் கழுத்தைக் கட்டி;
கன்னத்தில் முத்தமிட;
நற்காலை பொழுது
நன்றே விடிந்தது!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
{{comments.comment}}