சென்னை: தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்க தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரைக் கொச்சைப்படுத்தி பத்திரிகையாளரிடம் பேசியுள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர் வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வது நடந்து வருகின்றன.
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த பிரச்சனையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் அமைதியை குறைத்தல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனை பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம் பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதற்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரீக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணி திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!
கவி கலையின் இரு கவிதைகள்!
எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!
சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
அவளா... இவள்!?
உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}