- செ. சாந்தி சின்னத்தம்பி
தாவணிக்
கனவுகளில்
தவழ்ந்திருந்த காதல் ..
சாதி மதம்
காணாது
சாலை வீதிகளில்
சங்கமித்த காதல்...
சரித்திரத்தில் இடம்பெறவே பரிணமித்த
காதல் ...
அன்றிலாய்
வாழவே
ஆசைப்பட்ட காதல்...
குடும்பத்தின்
கௌரவத்தில்
குலைந்து போன காதல் ...
நெஞ்சம்
தொட்டவனின்
உயிரைக்
காத்திடவே
மறைந்து போன
காதல்...
உருவங்கள்
மறைந்தாலும்
மறந்தாலும்...
உயிர் உள்ளவரை
வாழும்
இந்தக் காதல்...
ஆம்....
உள்ளத்தின்
ஆன்மாவில்
மறைந்த காதல் ...
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
பூமியில் புதைந்த பூலான்தேவி
Tamil Poem: புதிய விடியல்
{{comments.comment}}