சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Apr 13, 2025,11:53 AM IST
சென்னை: சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக மிக கன மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது கோடை மழை வந்து சற்றே புழுக்கத்தைத் தணித்தாலும் கூட வெயில் குறைந்தபாடில்லை.



தலைநகர் சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. வெப்ப அலையும் வீசியதால் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், மிகப் பெரிய அளவிலான மழை மேகங்கள் சிங்கப்பூர் மீது படர்ந்து கொண்டுள்ளன. அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மிகப் பெரிய அளவிலான கன மழை பெய்யும்.

சில நேரங்களில் இது எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு மிக மிக அடர்த்தியாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன். மழை வந்தால் என்ஜாய் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்