சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Apr 13, 2025,11:53 AM IST
சென்னை: சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக மிக கன மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது கோடை மழை வந்து சற்றே புழுக்கத்தைத் தணித்தாலும் கூட வெயில் குறைந்தபாடில்லை.



தலைநகர் சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. வெப்ப அலையும் வீசியதால் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், மிகப் பெரிய அளவிலான மழை மேகங்கள் சிங்கப்பூர் மீது படர்ந்து கொண்டுள்ளன. அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மிகப் பெரிய அளவிலான கன மழை பெய்யும்.

சில நேரங்களில் இது எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு மிக மிக அடர்த்தியாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன். மழை வந்தால் என்ஜாய் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

news

ஆண்களின் ஆதங்கம் நியாயமானதுதானே!

news

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.. உலகிலேயே மிக உயரமான.. 81 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

news

நூல் பல கல் (சிறுகதை)

news

தானம் வீட்டிலிருந்து துவங்குகிறது!

news

பீகாரில் 10வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார்

news

20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்

news

சென்னிமலை திருக்கோயில்.. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரி கிரி கோவில்!

news

கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்