சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Apr 13, 2025,11:53 AM IST
சென்னை: சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக மிக கன மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது கோடை மழை வந்து சற்றே புழுக்கத்தைத் தணித்தாலும் கூட வெயில் குறைந்தபாடில்லை.



தலைநகர் சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. வெப்ப அலையும் வீசியதால் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், மிகப் பெரிய அளவிலான மழை மேகங்கள் சிங்கப்பூர் மீது படர்ந்து கொண்டுள்ளன. அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மிகப் பெரிய அளவிலான கன மழை பெய்யும்.

சில நேரங்களில் இது எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு மிக மிக அடர்த்தியாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன். மழை வந்தால் என்ஜாய் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவலையில் மூழ்கிய கிராமங்கள்.. சோகத்தில் மக்கள்.. விமான நிலைய விசனங்கள்!

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!

news

சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!

news

ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்