சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Apr 13, 2025,11:53 AM IST
சென்னை: சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக மிக கன மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது கோடை மழை வந்து சற்றே புழுக்கத்தைத் தணித்தாலும் கூட வெயில் குறைந்தபாடில்லை.



தலைநகர் சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. வெப்ப அலையும் வீசியதால் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், மிகப் பெரிய அளவிலான மழை மேகங்கள் சிங்கப்பூர் மீது படர்ந்து கொண்டுள்ளன. அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மிகப் பெரிய அளவிலான கன மழை பெய்யும்.

சில நேரங்களில் இது எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு மிக மிக அடர்த்தியாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன். மழை வந்தால் என்ஜாய் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்