பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு

Nov 13, 2025,11:38 AM IST

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தொடர வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு கவலைகள் எழுந்த நிலையில், வீரர்கள் முன்கூட்டியே நாடு திரும்பினால், அவர்கள் மீது  விசாரணை" நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.


செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 12 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர். தற்போது இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பல இலங்கை வீரர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர்.


ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) ஒரு அறிக்கையில், வீரர்கள் தங்கள் உத்தரவுகளை மீறி வெளியேறினால், அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும், சுற்றுப்பயணம் எந்தத் தடையும் இன்றி தொடரும் என்றும் கூறியுள்ளது. உத்தரவுகளை மீறி ஏதேனும் வீரர், வீரர்கள் அல்லது ஆதரவு ஊழியர்கள் திரும்பினால், ஒரு முறையான விசாரணை நடத்தப்படும்... மேலும் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்று வாரியம்  எச்சரித்துள்ளது. 




இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளின் தேதிகளை மாற்றி அமைத்துள்ளது. இரண்டாவது போட்டி வியாழக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமையும், மூன்றாவது போட்டி சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையும் ராவல்பிண்டியில் நடைபெறும்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர இலங்கை அணி எடுத்த முடிவுக்கு இலங்கை அணிக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். விளையாட்டு மனப்பான்மையும் ஒற்றுமையும் பிரகாசமாக ஒளிர்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


இதற்கு முன்பு 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்போது, இலங்கை வீரர்கள் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் பேருந்தின் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சர்வதேச அணிகள் கிட்டத்தட்ட பத்து வருடமாக பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்த்தன. அதன் பிறகுதான் சில அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல ஆரம்பித்தன.


தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்தியிலும் செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டியில் நடந்த முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள், நக்வி புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை வீரர்களின் ஹோட்டலுக்குச் சென்று அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தனர்.


தற்போதைய சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் T20 முத்தரப்பு தொடர் ஆகியவை அடங்கும். இந்த T20 தொடர் நவம்பர் 17 முதல் 29 வரை நடைபெறும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராம் சரண் புது முடிவு... டெல்லியில் இப்போது ஷூட்டிங் வேண்டாம்.. ராஷ்மிகா படமும் ஒத்திவைப்பு

news

ஆம்னி உரிமையாளர்களுடன் உடனடியாக பேச்சு நடத்துக : எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை!

news

ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!

news

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு

news

இந்தியா முழுக்க.. 8 இடங்களில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த சதிகாரர்கள்.. பரபர தகவல்

news

டெல்லி சம்பவம்...வெடி பொருள் நிரம்பிய 2வது கார் எங்கே? தீவிரமாகும் தேடுதல் வேட்டை

news

டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

news

SIR.. வாங்கிய படிவங்களை நிரப்பத் தெரியாமல்.. விழிக்கும் மக்கள்.. திரும்பப் பெறுவதில் குழப்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்