- கவிதா உடையப்பன், சேலம்
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது !
ஜக்கம்மா நல்லாசி புரிஞ்சிட்டா
நாளைய பொழுதும் விடிஞ்சிட்டா
மகமாயி செல்வத்த வாரி வழங்கிடுவா
கல்லும் முத்தாகுமப்பா !
கலகலன்னு சிரிப்புச் சத்தம் ஒ வீட்ல கேக்குதப்பா
நீ கருணை ஜீவனப்பா
கடகடன்னு ஒ அந்தஸ்து ஏறுமப்பா

சுக்கிரன் தான் வீட்ல புகுந்திட்டாம்மா !
சுப நிகழ்சிகள் அடுத்தடுத்து நடக்குமம்மா
கீரைய கில்லி போட்டு கூட்டு வச்சிருப்ப
இனி, முந்திரிய அள்ளிப் போட்டு ஆயிரம் பேருக்கு குடுப்ப
ரோஜாப்பூ போல இருக்கும் ஒ முகத்த பாரு !
தோட்டத்தில ஊசி தட்டான் திரியுது பாரு
வீட்டுக்குள்ள பச்ச வெட்டிக்கிளி பறக்குது பாரு
ஒ இஷ்டமெல்லாம் விரைவா நிறைவேறும் பாரு
வாழ்க்கை ஓட்டத்தில நீ நின்னியே தேவதையா !
மூக்கை சிமிட்டி சிரிச்சியே மரக் காயா
ஒ இல்லத்த நல்லதாயி காப்பா
அவ உள்ளத்திலதான் குடியிருப்பா
காத்திருந்த நாட்களெல்லாம் கப்பலேறி போச்சு !
கரை ஏறி நீயும் வந்திட்ட ஆச்சு
தாமிர பரணி போல துள்ளி ஓடிடுவ
தங்க மீனப் போல நீயும் மின்னிடுவ
சாத்தியமான்னு கேக்காத தாயி
அதிசயம் நடக்குது, நல்லசொல்ல நம்பு நீ
அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் அத்தனையும் சிருஷ்டம் !
தானா பெருகுது ஒ குடும்ப விருக்ஷம் !
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}