- கவிதா உடையப்பன், சேலம்
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது !
ஜக்கம்மா நல்லாசி புரிஞ்சிட்டா
நாளைய பொழுதும் விடிஞ்சிட்டா
மகமாயி செல்வத்த வாரி வழங்கிடுவா
கல்லும் முத்தாகுமப்பா !
கலகலன்னு சிரிப்புச் சத்தம் ஒ வீட்ல கேக்குதப்பா
நீ கருணை ஜீவனப்பா
கடகடன்னு ஒ அந்தஸ்து ஏறுமப்பா

சுக்கிரன் தான் வீட்ல புகுந்திட்டாம்மா !
சுப நிகழ்சிகள் அடுத்தடுத்து நடக்குமம்மா
கீரைய கில்லி போட்டு கூட்டு வச்சிருப்ப
இனி, முந்திரிய அள்ளிப் போட்டு ஆயிரம் பேருக்கு குடுப்ப
ரோஜாப்பூ போல இருக்கும் ஒ முகத்த பாரு !
தோட்டத்தில ஊசி தட்டான் திரியுது பாரு
வீட்டுக்குள்ள பச்ச வெட்டிக்கிளி பறக்குது பாரு
ஒ இஷ்டமெல்லாம் விரைவா நிறைவேறும் பாரு
வாழ்க்கை ஓட்டத்தில நீ நின்னியே தேவதையா !
மூக்கை சிமிட்டி சிரிச்சியே மரக் காயா
ஒ இல்லத்த நல்லதாயி காப்பா
அவ உள்ளத்திலதான் குடியிருப்பா
காத்திருந்த நாட்களெல்லாம் கப்பலேறி போச்சு !
கரை ஏறி நீயும் வந்திட்ட ஆச்சு
தாமிர பரணி போல துள்ளி ஓடிடுவ
தங்க மீனப் போல நீயும் மின்னிடுவ
சாத்தியமான்னு கேக்காத தாயி
அதிசயம் நடக்குது, நல்லசொல்ல நம்பு நீ
அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் அத்தனையும் சிருஷ்டம் !
தானா பெருகுது ஒ குடும்ப விருக்ஷம் !
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}