IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

Apr 27, 2025,01:27 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமான நிலைக்குப் போய் விட்ட  சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு ரிலாக்ஸான செய்தி இது.


புண்பட்ட மனதை கூல் செய்ய, நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை சிக்ஸர்களை விளாசிய சிங்கங்கள் குறித்த ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம்.


நிக்கோலஸ் பூரன்




லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்தான் நிக்கோலஸ் பூரன். தனது அதிரடி ஆட்டத்தால் வானை நோக்கி பந்துகளைப் பறக்கவிட்டு சிக்ஸர்களைக் குவித்துக் கொண்டுள்ளார். அவரது மட்டையின் வீச்சு எதிரணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்து வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள பூரன் 31 சிக்ஸர்களை விளாசித் தள்ளியுள்ளார். நடப்பு தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியுள்ள வீரர் இவர்தான்.


ஸ்ரேயஸ் ஐயர்




பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்ப்பதில் வல்லவர். அவர் களத்தில் இறங்கினாலே பவுண்டரிகளும் சிக்ஸர்களும்தான் என்ற நிலையை உருவாக்கி விடுகிறார். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களுக்குப் பரவசத்தை அளிக்கிறது. இதுவரை8 போட்டிகளில் ஆடியுள்ள ஐயர், 20 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வால்




நிதானமான அதிரடி மன்னன். ஜெய்ஸ்வாலைப் பொறுத்தவரை, நிதானமாகத் தொடங்கி பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் திறமையானவர். பந்துவீச்சாளர்களின் பலவீனத்தை அறிந்து சிக்ஸர்களை விளாசுவது இவரது தனிச்சிறப்பு. 9 போட்டிகளில் 20 சிக்ஸர்களைப் பறக்க விட்டுள்ளார்.


சூர்ய குமார் யாதவ்




மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்ய குமார் யாதவ், இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 9 போட்டிகளில் 19 சிக்ஸர்களை விளாசியுள்ளார் சூர்ய குமார் யாதவ்.  கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் இவர் கில்லாடி. நெருக்கடியான சூழ்நிலையிலும் சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது இவரது வழக்கம்.


பிரியன்ஷ் ஆர்யா




பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ஆர்யா அதிரடியாகத்தான் இந்தத் தொடரில் ஆடி வருகிறார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்யா இதுவரை 18 சிக்ஸர்ளை அடித்துள்ளார். இந்த வீரர்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல திறமையான பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பான சிக்ஸர் விருந்தாக அமைவதில் இவர்களது பங்கு மகத்தானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்