தென் தமிழகத்தில்.. ஜன 31 லேசான மழைக்கு வாய்ப்பு.. மேக்ஸிமம் வறண்ட வானிலையே நிலவுமாம்!

Jan 25, 2024,05:17 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவ வாய்ப்புள்ளதாகவும்,

தென் மாவட்டங்களில் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


மேலும் தென் மாவட்டங்களில் வரும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கலாம் .அதே சமயம் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.




நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.


ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும். இதனால் இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்