சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவ வாய்ப்புள்ளதாகவும்,
தென் மாவட்டங்களில் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் தென் மாவட்டங்களில் வரும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கலாம் .அதே சமயம் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும். இதனால் இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
உழுது விளைந்த நிலம் ஊத்துத் தண்ணீ பாஞ்ச நிலம்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
காமன்வெல்த் பழுதூக்குதல் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு
சிந்தனைச் சிதறல்.. கற்றுக் கொடுத்தோம்.. கற்றுக் கொள்கிறோம்.. காலத்தின் கட்டாயம்!
Dr APJ Abdul Kalam: ஆன்மிக பூமியில் முளைவிட்ட அறிவியல் பயிர்.. அப்துல் கலாம்!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
Monday Motivation: எழுதுகோலின் விண்ணப்ப மனுவும்... மறுமொழியும்!
நடிகர் ராம்சரணுக்கு கோவை மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை
{{comments.comment}}