- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கருப்பு கொண்டை கடலை முளைகட்டியது (chick peas) இருக்கே.. சூப்பரான ஒரு ஹெல்த்தியான உணவுங்க. அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.
ஸ்ப்ரவுட்ஸ் ஈசியாக முளை கட்டுவது எப்படி என்று செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.
ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் கொண்டைக்கடலையை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு அடுத்த நாள் காலை நன்றாக தண்ணீர் வடித்து விட்டு ஒரு ஏர்டைட் கண்டெய்னர் அல்லது ஸ்டீல் பாக்ஸில் போட்டு மூடி வைக்கவும் .இரண்டு நாட்களில் அழகாக சூப்பரான ஸ்ப்ரவுட்ஸ் அதாவது கொண்டைக்கடலை முளை வந்துவிடும்.
முளைகட்டிய கொண்டைக்கடலையின் பயன்கள் .இத்தனை சத்துக்களா இதில் இருக்கின்றன!

முளைகட்டிய கொண்டைக்கடலை பயிரில் புரதம் ,வைட்டமின் ஏ ,சி ,பி6,K , நார்ச்சத்து, ரிபோவ் பிளவின், மாங்கனிசு ,துத்தநாகம், காப்பர் சத்து ,தையாமின் , பொட்டாசியம் ,பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது .இதில் உள்ள கடினமான கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக(digestion) ஜீரணிக்கின்றன.அதனால் நம்ம ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்தி அதில் உள்ள கரையக்கூடிய நார் சத்துகள் பெரிதும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் .இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவு .எனவே, டயபடிஸ் இருப்பவர்களுக்கு பசி எடுக்காமல் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.
முளைகட்டிய கொண்டைக்கடலையில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .அதனால் இதயத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது எனவே இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. பெருங்குடல் ,மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
சருமம் பாதுகாக்க மிகவும் உறுதுணையாக உள்ளது: முளைக்கட்டிய கொண்டை கடலை இல் உள்ள மெக்னீசியம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து வயதான தோற்றத்தை அளிக்கும் அறிகுறிகளை தடுக்கிறது. இது சுருக்கம் ஏற்படுத்தும் பிரீராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் அதனால் முதுமை தள்ளி போகவும் இளமையாக இருக்கவும் உதவுகிறது.
இத்தனை ஊட்டச்சத்து நிறைந்த முளைக்கட்டிய கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு நலமான நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}