சென்னை: 2022ம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, சத்யபிரியா கல்லூரிக்குச் செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, சதீஷூம் அங்கு வந்துள்ளார். அப்போது தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரயில் மோதியல் சத்யபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பளித்தார். சதீஷை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, சதீஷூக்கான தண்டணை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்
ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)
National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!
{{comments.comment}}