டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது குறித்து சுப்பிரமணியம் சாமி கிண்டலடித்துள்ளார். ஆனால் அவருக்கு நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் வந்திருந்தார். அங்குள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் அவர் பயணித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பேசு பொருளாகின. குறிப்பாக விமானத்தில் பறந்தபடி வானில் பிரதமர் மோடி கையசைக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதுகுறித்து பலர் விமர்சனங்களும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமியும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் ஒரு விமானப்படை அதிகாரியிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம் கூறுகையில், 25,000 அடி உயரத்தில், கிளாஸ் கவர் கூட போடாமல் பிரதமர் நரேந்திர மோடி பறப்பது போன்ற புகைப்படம் போலியானது. அவ்வளவு உயரத்தில் கிளாஸ் கவர் போடாமல் பயணித்தால் நம்மைத் தூக்கிக் கொண்டு வந்து அப்படியே கீழே எறிந்து விடும் என்றார் அவர். இதை பிரதமர் அலுவலகத்தால் மறுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார் சாமி.
ஆனால் சாமியின் கருத்தை மறுத்து பலரும் அதில் கமெண்ட் போட்டுள்ளனர். நல்லா பாருங்க சார் கிளாஸ் கவர் இருக்கு.. அதோட பிரதிபலிப்பு கூட தெரியுது பாருங்க. உங்க மதிப்பை நீங்களே குறைச்சுக்காதீங்க என்று பலர் சாமியை கண்டித்துள்ளனர். இன்னொருவரோ, சுவாமிஜி உங்களுக்கு என்னாச்சு என்று நக்கலடித்துள்ளார். இன்னும் ஒருவரோ, முதல்ல உங்க கண்ணாடியை மாத்துங்க ஜி என்று கிண்டலடித்துள்ளார்.
உண்மையில் கிளாஸ் கவர் எல்லாம் பக்காவாக போட்டுத்தான் பிரதமர் மோடி அந்த விமானத்தில் பறந்தார். இதை அந்த வீடியோவிலேயே தெளிவாகக் காண முடியும். தரையில் இருந்தபோது, புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தை வைத்து சாமி பேசுவதாக தெரிகிறது.
சுப்பிரமணியம் சாமிக்கும், பாஜக மேலிடத்திற்கும் இடையே தற்போது டேர்ம்ஸ் சரியில்லை. அவரை பாஜகவினர் யாரும் கண்டு கொள்வதும் கிடையாது. பிரதமர் மோடியை மட்டுமல்லாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கூட கடுமையாக விமர்சிப்பது சாமியின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}