சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரும்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக அளவிலான சரக்குககளை லாரிகளில் ஏற்றிச் செல்லும்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவை கவிழும் அபாயங்கள் அதிகம் உள்ளன. ஆனாலும் இதை பலரும் பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமான லோடு ஏற்றிக் கொண்டு போய் விபத்துக்குள்ளாகும் செயல்கள் நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.
இந்த நிலையில் சத்தியமங்கம்லத்தில், வேகமாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சாலை நடுவே வைத்திருக்கும் பேரிகாடை தாண்டி ஒரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்னர் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.
அந்த லாரியானது வேகமாக வந்து கொண்டிருந்தது. பேரிகாட் பகுதியில் லாரி வந்து வளைய முயன்றபோது திடீரென ஒரு பக்கமாக வண்டி குடை சாய்ந்து அப்படியே கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்புகள் சீட்டுக் கட்டு போல அப்படியே சரிந்து சாலையோரம் விழுந்தன. இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}