சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரும்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக அளவிலான சரக்குககளை லாரிகளில் ஏற்றிச் செல்லும்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவை கவிழும் அபாயங்கள் அதிகம் உள்ளன. ஆனாலும் இதை பலரும் பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமான லோடு ஏற்றிக் கொண்டு போய் விபத்துக்குள்ளாகும் செயல்கள் நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.
இந்த நிலையில் சத்தியமங்கம்லத்தில், வேகமாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சாலை நடுவே வைத்திருக்கும் பேரிகாடை தாண்டி ஒரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்னர் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.
அந்த லாரியானது வேகமாக வந்து கொண்டிருந்தது. பேரிகாட் பகுதியில் லாரி வந்து வளைய முயன்றபோது திடீரென ஒரு பக்கமாக வண்டி குடை சாய்ந்து அப்படியே கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்புகள் சீட்டுக் கட்டு போல அப்படியே சரிந்து சாலையோரம் விழுந்தன. இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}