- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிறப்பு போலத்தான்.. அந்த தினத்தை தொடங்குவதையும் உற்சாகமாகத்தானே நாம் தொடங்க வேண்டும்.. அதுக்கு நமக்குக் கை கொடுப்பது டீ தாங்க.. அதிலும் லெமன் டீ குடிச்சுப் பாருங்க.. அன்னிக்கு முழுக்க நீங்க ஃபிரஷ்ஷா உணருவீங்க, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது.
லெமன் டீயோட இந்த நாளை தொடங்கலாமா?

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1/2 பழம்
டீ தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 3 (தட்டி வைத்துக் கொள்ளவும்)
தண்ணீர் - 2 கப்
புதினா - 2 இலை (தேவையென்றால்)
தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை :
* 2 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதோடு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.
* தட்டிய ஏலக்காயை அதோடு சேர்த்து சிறிது நேரம் அவற்றை கொதிக்க விட வேண்டும்.
* இறக்கி அவற்றை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, புதினா இலைகளை போட்டு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.
* லெமன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். வளர்சிதை மாற்றத்தை தூண்டக் கூடியது. இந்த லெமன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் தீரும். பசியை தூண்டும்.
Have a wonderful day friends.. உங்க நட்பு வட்டாரத்துக்கும் இந்த டீயை ரெக்கமன்ட் பண்ணுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}