- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிறப்பு போலத்தான்.. அந்த தினத்தை தொடங்குவதையும் உற்சாகமாகத்தானே நாம் தொடங்க வேண்டும்.. அதுக்கு நமக்குக் கை கொடுப்பது டீ தாங்க.. அதிலும் லெமன் டீ குடிச்சுப் பாருங்க.. அன்னிக்கு முழுக்க நீங்க ஃபிரஷ்ஷா உணருவீங்க, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது.
லெமன் டீயோட இந்த நாளை தொடங்கலாமா?

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1/2 பழம்
டீ தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 3 (தட்டி வைத்துக் கொள்ளவும்)
தண்ணீர் - 2 கப்
புதினா - 2 இலை (தேவையென்றால்)
தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை :
* 2 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதோடு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.
* தட்டிய ஏலக்காயை அதோடு சேர்த்து சிறிது நேரம் அவற்றை கொதிக்க விட வேண்டும்.
* இறக்கி அவற்றை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, புதினா இலைகளை போட்டு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.
* லெமன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். வளர்சிதை மாற்றத்தை தூண்டக் கூடியது. இந்த லெமன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் தீரும். பசியை தூண்டும்.
Have a wonderful day friends.. உங்க நட்பு வட்டாரத்துக்கும் இந்த டீயை ரெக்கமன்ட் பண்ணுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}