- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிறப்பு போலத்தான்.. அந்த தினத்தை தொடங்குவதையும் உற்சாகமாகத்தானே நாம் தொடங்க வேண்டும்.. அதுக்கு நமக்குக் கை கொடுப்பது டீ தாங்க.. அதிலும் லெமன் டீ குடிச்சுப் பாருங்க.. அன்னிக்கு முழுக்க நீங்க ஃபிரஷ்ஷா உணருவீங்க, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது.
லெமன் டீயோட இந்த நாளை தொடங்கலாமா?

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1/2 பழம்
டீ தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 3 (தட்டி வைத்துக் கொள்ளவும்)
தண்ணீர் - 2 கப்
புதினா - 2 இலை (தேவையென்றால்)
தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை :
* 2 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதோடு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.
* தட்டிய ஏலக்காயை அதோடு சேர்த்து சிறிது நேரம் அவற்றை கொதிக்க விட வேண்டும்.
* இறக்கி அவற்றை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, புதினா இலைகளை போட்டு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.
* லெமன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். வளர்சிதை மாற்றத்தை தூண்டக் கூடியது. இந்த லெமன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் தீரும். பசியை தூண்டும்.
Have a wonderful day friends.. உங்க நட்பு வட்டாரத்துக்கும் இந்த டீயை ரெக்கமன்ட் பண்ணுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}