சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
லோக்சபா தேர்தல் வரும் நிலையில் தமிழநாடு அரசின் பட்ஜெட்டுக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பான முத்திரைச் சின்னம் நேற்று வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, என்னென்ன தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இது. முதல் 3 பட்ஜெட்டுகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு
தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க கை கொடுக்குமா AI?
நடிகை நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி.. போலீஸ் தீவிர சோதனை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!
கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. பலியான சிறுவனின் தந்தை வழக்கு
உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் தங்கம் விலை.. அயர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினர்!
டான்ஸ், ஓவியம்.. திருவள்ளுவர் வேடம் தாங்கி.. திருக்குறள் சொல்லி.. அசத்திய சிறப்புக் குழந்தைகள்!
பொக்கிஷம் (குட்டிக் கதை)
{{comments.comment}}