சபரிமலை சீசன்.. தமிழ்நாடு அரசு பேருந்துகள்.. பம்பை வரை செல்ல கேரள அரசு அனுமதி

Nov 08, 2024,05:00 PM IST

சென்னை: அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையில்  இருந்தே  தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கிற்காக வருகிற 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதன்படி மண்டல பூஜை டிசம்பர் 26ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதியும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு தற்போது செய்து வருகிறது.




இந்நிலையில், மண்டல பூஜை முதல் மகர ஜோதி வரை தமிழக பஸ்கள் பம்பை வரை இயக்கப்படும் என்று தமிழ அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்கிங் பிரச்சனை எழாத வகையில், 2 தமிழ்நாடு பஸ்களை அங்கேயே நிறுத்தி வைக்க கேரள போக்குவரத்துத்துறை தேவஸ்தானத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக எஸ்.இ.டி.சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பேருந்துகளில் அலைய வேண்டிய நிலை இனி இருக்காது. மண்டல பூஜை, மகர ஜோதியை முன்னிட்டு நவ.,15 முதல் ஜன.,16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


மேலும்,  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. சபரி மலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர்  30ம் தேதி வரை நடை சாத்தப்படுவதால், டிசம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்