இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.. கொலைவெறித் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் வேதனை!

Dec 21, 2024,05:58 PM IST

நாகப்பட்டனம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதால் நமது மீனவர்கல் படுகாயம் அடைந்தனர்.


வேதாரண்யம் கோடியக்கரைக்கு  அருகே உள்ள அக்கரப்பட்டியை சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமான பைபர் படகில் ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம், ஆகியோர் நேற்று மதியம் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிரே  இரண்டு பைபர் படகுகளில் வந்த  6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மூவரையும் வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். 




பிறகு பைபர் படகில் இருந்த வலை, மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை  கொள்ளையர்கள் எடுத்து சென்று  ஓடிவிட்டனர். இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்கள் மூன்று லட்சம் மதிப்பு உடையவை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 


இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம் ஆகிய  மூன்று மீனவர்களும் கடற்கரைக்கு வந்தனர்.  சக மீனவர்கள் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அதேபோல, பெருமாள் பேட்டையை சேர்ந்த குமார்  என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார் மற்றும் ஜெகன் லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் அதே பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்களையும் தாக்கி இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்களுக்கு சொந்தமான ஒரு லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.


வேதாரண்யம் மீனவர்களிடம் அடுத்தடுத்து இலங்கை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்