இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.. கொலைவெறித் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் வேதனை!

Dec 21, 2024,05:58 PM IST

நாகப்பட்டனம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதால் நமது மீனவர்கல் படுகாயம் அடைந்தனர்.


வேதாரண்யம் கோடியக்கரைக்கு  அருகே உள்ள அக்கரப்பட்டியை சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமான பைபர் படகில் ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம், ஆகியோர் நேற்று மதியம் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிரே  இரண்டு பைபர் படகுகளில் வந்த  6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மூவரையும் வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். 




பிறகு பைபர் படகில் இருந்த வலை, மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை  கொள்ளையர்கள் எடுத்து சென்று  ஓடிவிட்டனர். இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்கள் மூன்று லட்சம் மதிப்பு உடையவை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 


இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம் ஆகிய  மூன்று மீனவர்களும் கடற்கரைக்கு வந்தனர்.  சக மீனவர்கள் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அதேபோல, பெருமாள் பேட்டையை சேர்ந்த குமார்  என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார் மற்றும் ஜெகன் லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் அதே பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்களையும் தாக்கி இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்களுக்கு சொந்தமான ஒரு லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.


வேதாரண்யம் மீனவர்களிடம் அடுத்தடுத்து இலங்கை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்