சென்னை : 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
- தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.
- 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது.
- இனி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்.
- 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தொடரும்
இதுதவிர 3,5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. நீட் தேர்வு இருக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும். தொடக்க நிலை முதல் பல்கலைகழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டதாக மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது என்றும் புதிய கல்வி கொள்கை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரம்: தவெக அறிவித்த ரூ.20 லட்சம் நிவராணம் 41 குடும்பத்தாரின் வங்கியில் செலுத்தப்பட்டது
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}