புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென நடந்த இந்த விபத்தில் சிக்கி 20 பயணிகள் காயமடைந்தனர்.
புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், பிள்ளை சாவடி என்ற இடத்தில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி, தறி கெட்டு ஓடி சாலை நடுவே இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி நின்றது.
வேகமாக போய் மோதியதால் பேருந்தின் முன் பக்கம் தடுப்புக்குள் மாட்டிக்கொண்டது. அதன் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை .
படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலை எப்போதுமே அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவே தொடர்வது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}