ரோட்டுல ஓடுன பஸ்.. திடீரென சாலை தடுப்பில் மோதி.. 20 பேர் காயம்!

Sep 23, 2023,11:52 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென நடந்த இந்த விபத்தில் சிக்கி 20 பயணிகள் காயமடைந்தனர். 


புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், பிள்ளை சாவடி என்ற இடத்தில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி, தறி கெட்டு ஓடி சாலை நடுவே இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி நின்றது. 




வேகமாக போய் மோதியதால் பேருந்தின் முன் பக்கம் தடுப்புக்குள் மாட்டிக்கொண்டது. அதன் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. 

நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை .


படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கிழக்குக் கடற்கரைச் சாலை எப்போதுமே அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவே தொடர்வது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்