புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென நடந்த இந்த விபத்தில் சிக்கி 20 பயணிகள் காயமடைந்தனர்.
புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், பிள்ளை சாவடி என்ற இடத்தில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி, தறி கெட்டு ஓடி சாலை நடுவே இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி நின்றது.
வேகமாக போய் மோதியதால் பேருந்தின் முன் பக்கம் தடுப்புக்குள் மாட்டிக்கொண்டது. அதன் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை .
படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலை எப்போதுமே அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவே தொடர்வது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}