ரோட்டுல ஓடுன பஸ்.. திடீரென சாலை தடுப்பில் மோதி.. 20 பேர் காயம்!

Sep 23, 2023,11:52 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென நடந்த இந்த விபத்தில் சிக்கி 20 பயணிகள் காயமடைந்தனர். 


புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், பிள்ளை சாவடி என்ற இடத்தில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி, தறி கெட்டு ஓடி சாலை நடுவே இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி நின்றது. 




வேகமாக போய் மோதியதால் பேருந்தின் முன் பக்கம் தடுப்புக்குள் மாட்டிக்கொண்டது. அதன் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. 

நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை .


படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கிழக்குக் கடற்கரைச் சாலை எப்போதுமே அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவே தொடர்வது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்