சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை கேட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் ராஜ்பவன் உள்ளது. ஆளுநர் மாளிகையான இங்கு நேற்று கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் வீசிய குண்டு ராஜ்பவன் கேட் மீது விழுந்து வெடித்தது. மற்ற வெடிக்காத 3 குண்டுகளை அங்கிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருக்கா வினோத் ஏற்கனவே சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திக் கைதாகி சிறைக்குப் போனவர். சமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்த முயன்று சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}