நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே  கொல்லப்படுகிறது.. ஆளுநர் மாளிகை ஆதங்கம்

Oct 26, 2023,05:33 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை கேட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் ராஜ்பவன் உள்ளது. ஆளுநர் மாளிகையான இங்கு நேற்று கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் வீசிய குண்டு ராஜ்பவன் கேட் மீது விழுந்து வெடித்தது. மற்ற வெடிக்காத  3 குண்டுகளை அங்கிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.


கருக்கா வினோத் ஏற்கனவே சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திக் கைதாகி சிறைக்குப் போனவர். சமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்த முயன்று சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு  மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்